மொன்ட்ரியல் நகரின் முக்கிய போக்குவரத்துச் சேவையான மெட்ரோ இரயிலின் மஞ்சள் வழித்தடச் (Yellow Line), சுரங்கப்பாதையில் ஏற்பட்ட நீர் கசிவு காரணமாக நேற்று காலை திடீரென நிறுத்தப்பட்டது.
திங்கட்கிழமை காலை சுமார் 7:10 மணியளவில், லாங்குயெல் (Longueuil) மற்றும் பெரி-யூகாம் (Berri-UQAM) நிலையங்களுக்கு இடையே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை அதிகாரிகள் கவனித்தனர்.
இரயில் பாதையில் உள்ள நீரை வெளியேற்றும் பம்பிங் ஸ்டேஷனில் (Pumping Station) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தண்ணீர் தேங்கியது உறுதி செய்யப்பட்டது.
பாதுகாப்பு கருதி உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இரயில் சேவை நிறுத்தப்பட்டது. காலை நேரப் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்ததால், மொன்ட்ரியல் போக்குவரத்து கழகம் (STM) உடனடியாக மாற்றுப் பேருந்துகளை (Shuttle Buses) இயக்கியமை குறிப்பிடத்தக்கது.


