கியூபெக்கின் லாரன்ஷியன்ஸ் பிராந்தியத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் இருவர் உயிரிழந்தமை குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்தில் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொன்ட்ரியலுக்கு வடமேற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாசூட் நகருக்கு அருகில் ரூட் 158 நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.
எதிர்த் திசையில் வந்த வாகனம் திடீரெனத் தனது பாதையை விட்டு விலகி, மற்றொரு வாகனம் மீது மோதியமை காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கு காரணமான வாகனம் ஏன் திடீரெனத் தனது பாதையை விட்டு விலகியது என்பதைக் கண்டறிவதற்காக விபத்து சார் புலனாய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.


