கியூபெக் நகரைச் சேர்ந்த 16 வயதுச் சிறுவன் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட சர்வதேச நவ-நாசி அமைப்பான
ஆட்டம்வாஃபென் டிவிஷன் (Atomwaffen Division) கொள்கைகளைப் பரப்பி, இளைஞர்களைப் பயங்கரவாதப் பாதையில் ஈர்ப்பதற்கு அந்த சிறுவன் முயன்றதாக இந்தக் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டு கனடா இந்த அமைப்பை ஒரு பயங்கரவாத இயக்கமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.கியூபெக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்தச் சிறுவன், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து தான் குற்றமற்றவர் (Not Guilty) என வாதிட்டுள்ளான்.
கனடிய மத்திய காவல்துறையின் தேசிய பாதுகாப்புப் பிரிவு கடந்த 2024-ம் ஆண்டு முதல் இந்தச் சிறுவனைக் கண்காணித்து வந்தது.
சமூக வலைதளங்கள் வாயிலாக வன்முறையைத் தூண்டும் கருத்துக்களைப் பதிவிட்டதுடன், புதிய நபர்களைப்பயங்கரவாத அமைப்பில் சேர்க்கும் நோக்கில் பிரசாரப் பொருட்களை உருவாக்கி விநியோகித்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு செப்டம்பரில் கைது செய்யப்பட்ட இவரிடமிருந்து கணினி மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இரண்டு வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் சிறுவன் என்பதால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை. மேலும் விசாரணை முடியும் வரை அவர் காவல்துறையின்கட்டுப்பாட்டுக்கு வெளியே இருக்க நீதிமன்றம் அனுமதிஅளித்துள்ளது.
