நாட்டின் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 8 ஹெய்ட்டி (Haitian) நாட்டு அகதிகள், கடும் பனிப்பொழிவு மற்றும் உறைபனியில் சிக்கி உயிருக்குப் போராடிய நிலையில் கனடியப் பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
கியூபெக் மாகாணத்தின் ஹெமிங்ஃபோர்ட் (Hemmingford) பகுதியில் வைத்தே, இந்த அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.மீட்கப்பட்ட அகதிகள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலருக்கு உடல் வெப்பம் மிகக் குறைந்து, கை கால்கள் உறைந்துபோகும் & ஃப்ரோஸ்ட்பைட் (Frostbite) பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினர் இந்த அகதிகள் குறித்து வழங்கிய எச்சரிக்கையைத் தொடர்ந்து, கனடிய ராயல் மவுண்டட் பொலீஸ் (RCMP), அவர்களை மீட்பதற்கான தேடுதல் பணியைத் தொடங்கியது.
கடும் குளிரினால் மனிதர்களால் நீண்ட நேரம் தேட முடியாத சூழல் அங்கு காணப்பட்டதாகவும், அதனால் இந்த தேடுதல் நடவடிக்கைக்கு, மனித உடல் வெப்பத்தை உணரும் டிரோன் (Drone) கேமராக்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.


