கியூபெக்கின் கூட்டணி அவெனிர் அரசாங்கத்தில் நீண்டகாலமாக பணியாற்றும் அமைச்சர் எரிக் கெய்ர் , வாகன காப்பீட்டு வாரியத்தின் ஆன்லைன் தளம் தொடர்பான அரை பில்லியன் டாலர் ஊழல் குற்றச்சாட்டின் மத்தியில் ராஜினாமா செய்துள்ளார்.
சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சர் எரி கெய்ர் வியாழக்கிழமை சமூக ஊடகங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டார், அதனை தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் “முற்றிலும் இந்த குற்றசாட்டை ஏற்றுக்கொள்ள முடியாதது.” என தெரிவித்துள்ளார்.
மேலும் “இந்த விஷயத்தில் அமைச்சராக எனது பொறுப்புகளை நான் ஏற்றுக்கொண்டாலும், போதுமான ஆதாரமின்றி என்னை நிந்திக்க எதுவும் இல்லை என்றாலும், இது எனது அரசாங்கத்திற்கும் எனது பிரதமருக்கும் தீங்கு விளைவிக்கும் ஒரு கவனச்சிதறலாக மாறிவிட்டது என்ற காரணத்துக்காக பதவி விலகும் முடிவுக்கு வந்தேன்,” என்று தெரிவித்தார்,
கடந்த வாரம் மாகாணத்தின் கணக்காய்வாளரால் மேற்கொள்ளப்பட்ட அறிக்கையைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் , இந்த ஆன்லைன் தளத்தை உருவாக்குவதில் குறைந்தது 500 மில்லியன் டாலர் மேலதிக செலவு மீறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் , மொத்தமாக 1.1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக தொகை இதற்காக செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கியூபெக் பிரதமர் பிரான்சுவா வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கெய்ர் ராஜினாமா செய்யவேண்டும் எனவும் ” “எனக்கு மறைக்க எதுவும் இல்லை.” எனவும் தெரிவித்தார்.