கியூபெக் மாகாணத்தில் வெப்பநிலை -20°C-க்கும் கீழே குறைந்துள்ள நிலையில், வீடற்ற நிலையில் வீதிகளில் தங்கியுள்ள மக்களைப் பாதுகாக்க மொன்றியல் மாநகராட்சி அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மொன்றியல் நகரின் பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட புதிய ‘வெப்ப மையங்கள்’ (Warming Centres) திறக்கப்பட்டுள்ளதாக, மொன்றியல் மேயர் சொராயா மார்டினெஸ் ஃபெர்ராடா (Soraya Martinez Ferrada) அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஹோச்லாகா (Hochelaga) பகுதியில் கடுங்குளிரால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த உயிரிழப்பினைத் தொடர்ந்தே, அவசரகால நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டிலேயே முதல்முறையாக மொன்றியல் நகரில், கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் பிரம்மாண்டமான ‘டிரெய்லர்’ (Trailers) வாகனங்கள் சூடாக்கப்பட்டு, தற்காலிகத் தங்குமிடங்களாக மாற்றப்பட்டுள்ளன.
மேயர் தலைமையிலான மொன்றியல் நகரத்தின் புதிய நிர்வாகம், வீதிகளில் வசிப்பவர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்ற மாட்டோம் என உறுதியளித்துள்ளது.


