வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் தலைநகர் ஒட்டாவாவில் வசிக்கும் வெனிசுலாவைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
மதுரோவின் வீழ்ச்சியை “நீதிக்குக் கிடைத்த வெற்றி” என ஒரு தரப்பினர் கொண்டாடினாலும், அமெரிக்காவின் இராணுவத் தலையீடு ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடுமோ என்ற அச்சமும் அங்கு எழுந்துள்ளது.
அதேவேளை, நீண்டகாலமாகத் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்த, வெனிசுலாவைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள், விரைவில் அங்கு ஜனநாயகம் திரும்பினால் மீண்டும் தங்கள் உறவினர்களைச் சந்திக்க முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
மதுரோ நீக்கப்பட்டாலும், அவருக்குப் பின்னால் இருந்த அதிகார வர்க்கம் இன்னும் அங்கேயே இருப்பதால், நாடு மீண்டும் வன்முறையில் சிக்குமா அல்லது அமைதி நிலவுமா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.
அதேசமயம், மதுரோவின் ஆதரவாளர்களும் அமைதி ஆர்வலர்களும் ஒட்டாவாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்னால் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


