கியூபெக் நகரின் செயிண்ட்-சாவேர் (Saint-Sauveur) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 42 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் விபத்தா அல்லது திட்டமிட்ட சதிச்செயலா என்ற கோணத்தில் ஆராய்ந்துவரும் வின்ட்சர் நகரப் போலீசார் தற்போது “மர்ம மரணம்” (Suspicious Death) என வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
செயிண்ட்-மத்தியாஸ் வீதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் தீப்பிழம்புகள் தெரிவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவசர உதவிப் பிரிவினருக்குத் தகவல் அளித்தனர்.
சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்ட விதம் மற்றும் அந்த நபரின் உயிரிழப்பில் சில சந்தேகங்கள் இருப்பதாகக் கியூபெக் நகரப் போலீசார் (SPVQ) தெரிவித்துள்ளனர்.


