2026-ஆம் ஆண்டில் வாட்டர்லூ பிராந்தியம் எதிர்கொள்ளப்போகும் மூன்று மிக முக்கியமான சவால்களை பிராந்திய நிர்வாகம் பட்டியலிட்டுள்ளது.
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, வீடற்றோர் முகாம்கள், பொதுப் போக்குவரத்து விரிவாக்கம் மற்றும் குடிநீர் இருப்பு ஆகிய விவகாரங்களில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளூர் அரசாங்கம் உள்ளது.
பிராந்தியத் தலைவர் கரேன் ரெட்மேன் (Karen Redman) இது குறித்துக் கூறுகையில், “2051-ஆம் ஆண்டுக்குள் 10 லட்சம் மக்கள் வசிக்கும் நகரமாக வாட்டர்லூ மாறத் தயாராகி வரும் வேளையில், இந்த அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது மிக அவசியம்” என்று கூறியுள்ளார்.
இந்தத் திட்டங்களுக்காக 2026-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 5.1 சதவீத வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சராசரியாக ஒரு வீட்டு உரிமையாளர் ஆண்டுக்கு 142 டொலர் கூடுதலாக வரி செலுத்த வேண்டியிருக்கும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.


