நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடந்த 150 ஆண்டுகளாக அணிந்து வந்த பாரம்பரிய சிவப்பு நிற உடைகள் (Robes) மாற்றப்பட்டு, புத்தம் புதிய நவீன
அங்கிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு சிறிய தையல் நிறுவனமான லே ரபா- ஜோய்ஸ் (Les Rabat-Joies) இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை
வடிவமைத்துள்ளது. பழைய கம்பளி மற்றும் விலங்குத் தோலினால் ஆக்கப்பட்ட நீதிபதி உடைகளுக்குப் பதில், தற்போது முற்றிலும் பட்டுத் துணியால் (Silk) ஆன
அங்கிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பழைய ஆடைகள் மிகவும் கனமாகவும், வெப்பமாகவும் இருந்ததால், நீதிபதிகளின் வசதிக்காகப் புதிய ஆடைகள் இலகுவான கறுப்பு நிறப் பட்டால் தயாரிக்கப்பட்டுள்ளன. கறுப்பு நிற அங்கியின் ஓரங்களில் கனடா தேசியக் கொடியைக் குறிக்கும் வகையில் சிவப்பு நிறப் பட்டுப் பட்டைகள் (Red Piping)
இணைக்கப்பட்டுள்ளன. ” இந்த மாற்றம் கனடா நீதித்துறையின் வெளிப்படைத்தன்மையையும், நவீன காலத்திற்கு ஏற்ப நாங்கள் மாறுவதையும் காட்டுகிறது” என்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரிச்சர்ட் வாக்னர் தெரிவித்துள்ளார்.
