நாட்டின் வரலாற்றில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்திற்குப் பிறகு முதன்முறையாக மக்கள் தொகை குறைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2025-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் கனடாவின் மக்கள் தொகை 0.2 சதவீதம் சரிந்துள்ளது. இது, கடந்த பல தசாப்தங்களில் இல்லாத ஒரு மிகப்பெரிய மாற்றமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா புள்ளியியல் துறை (Statistics Canada) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த ஆண்டின் அக்டோபர் மாதம் 1ஆம் திகதிக்குரிய நிலவரப்படி நாட்டின் மொத்த மக்கள் தொகை 4,15,75,585 ஆக உள்ளது.
வீடமைப்புப் பற்றாக்குறை மற்றும் பொதுச் சேவைகள் மீதான அழுத்தத்தைக் குறைக்க மத்திய அரசு எடுத்துள்ள புதிய குடியேற்றக்
கொள்கைகளே, இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
நாட்டின் மக்கள் தொகை குறைந்ததற்குப் பிறப்பு விகிதம் குறைந்தமையோ அல்லது இறப்பு விகிதம் அதிகரித்ததோ காரணமல்ல எனவும் கனடாவில் தற்காலிகமாகத் தங்கியிருந்தவர்கள் வெளியேறியதே இதற்கான முக்கியக் காரணமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாக்களில் கொண்டு வரப்பட்ட கடும் கட்டுப்பாடுகளால், சுமார் 73,000 மாணவர்கள் தங்கள் கல்வி அனுமதியை இழந்தோ அல்லது முடித்தோ வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


