Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

ஈரானில் தூதரகமொன்றைத் திறக்கும் நிலை தற்போது இல்லை என அறிவித்தது மத்திய அரசு.

ஜூன் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஈரான் மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளில் கனடாவின் தூதரகங்கள் இல்லாதது, அந்தந்த நாடுகளில் வாழும் கனேடிய குடிமக்களுக்கு அவசரக் காலங்களில் உதவுவதில் நாட்டிற்குப் பெரும் பின்னடைவையும் பலவீனத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகப் பிரதமர் மார்க் கார்னி ஒப்புக் கொண்டுள்ளார். எனினும், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் (Tehran) மீண்டும் கனேடியத் தூதரகத்தைத் திறக்கும் எண்ணம் தற்போதைக்குத் தமது அரசாங்கத்திற்கு இல்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் நிறைவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மார்க் கார்னி, “ஒரு நாட்டுடன் இராஜதந்திரத் தொடர்புகளைப் பேணுவது அல்லது அங்கு தூதரகச் சேவைகளை வழங்குவது என்பது, அந்த நாட்டின் அரசாங்கக் கொள்கைகளை முழுமையாக ஆதரிப்பதாக அர்த்தமாகாது” எனக் குறிப்பிட்டார்.

வெனிசுலாவில் ஏற்பட்ட மிகக் கொடூரமான இரட்டை நிலநடுக்கப் பேரழிவைச் சுட்டிக்காட்டிய பிரதமர், அங்கு கனேடியத் தூதர்கள் களத்தில் இல்லாததால் பாதிக்கப்பட்ட கனேடியர்களுக்குத் தேவையான அவசர உதவிகளை வழங்குவதில் ஒட்டாவா கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஈரானில் உள்ள கனேடியர்களை மீட்பதற்கும், நமது ‘இயற்கையான நட்பு நாடுகள் அல்லாத’ (Not natural allies) வேறு நாடொன்றின் தூதரக உதவியையே, கனடா நாட வேண்டியேற்பட்டது என்றும் அவர் கவலை வெளியிட்டார். கனடா அரசு ஈரானுடன் மீண்டும் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தி, ஒட்டாவா மற்றும் டெஹ்ரானில் உள்ள தூதரகங்களை மறுபடி திறக்கப் போவதாக ‘ஈரானிய நீதி கூட்டமைப்பு’ (Iranian Justice Collective) என்ற புலம்பெயர்ந்தோர் அமைப்பு அண்மையில் ஒரு தகவலை வெளியிட்டிருந்தது.

இந்த வதந்திகளுக்குப் பதிலளித்த பிரதமர் கார்னி, “ஈரானுடன் மீண்டும் தூதரக உறவை ஏற்படுத்துவது குறித்து மத்திய அரசாங்கத்திற்குள் எந்தவொரு ஆலோசனையும் (No discussions) நடைபெறவில்லை” என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி ‘SKS’ ரகத் துப்பாக்கிகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ‘PolySeSouvient’ அமைப்பு வலியுறுத்தல்
அடுத்த செய்தி மொன்றியல் துப்பாக்கிச் சூட்டில் ‘இன்செல்’ கருத்தியல் தீவிரவாதம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

உலகின் சிறந்த கடவுச்சீட்டுகளுக்கான தரவரிசையில் இலங்கைக்கு 168ஆவது இடம்

ஏப்ரல் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

செப்டம்பர் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் நடவடிக்கை- உணவகங்களுக்கு வழக்குத்தாக்கல்

அக்டோபர் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டி விகாரை காணியை விடுவிக்கும் பணிகள் 80 வீதம் பூர்த்தி

மார்ச் 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?