எகிப்தில் நடந்த அமைதி உச்சி மாநாட்டிற்கான பிரதமர் மார்க் கார்னியின் அவசரப் பயணத்திற்கு 7,36,466 டொலருக்கும் அதிகமான நிதி செலவாகியுள்ளது என தேசியப் பாதுகாப்புத் துறை இந்த தகவலை நாட்டின் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
கனேடிய விமானப் படையின் (RCAF) விமானத்தைப் பயன்படுத்தியிருந்தால் ஏற்படக்கூடிய செலவை விட, இந்த பயணத்துக்கு மூன்று மடங்கு அதிக செலவு ஏற்பட்டுள்ளது. பிரதமரின் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் வழக்கமாக இராணுவ விமானங்களில் பயணம் செய்து வருகின்ரார். ஆனால், இந்த அவசரப் பயணத்திற்கு கனேடிய விமானப்படையால் விமானம் வழங்க முடியாமையால், மத்திய அரசாங்கம் ஒரு தனியார் ஜெட் விமானத்தை வாடகைக்கு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த அவசரப் பயணத்தால் பிரதமர் கார்னிக்குக் கூடுதல் இராஜதந்திரப் பயன்கள் கிடைத்ததாக உயர் அரசு அதிகாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


