ஒட்டாவாவில் சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) இன் ஊழியர் ஒருவரைக் குத்திக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அஹமத் இஸ்மாயில் என்ற பெயருடையவரும் 46 வயதுடையவருமான சந்தேகநபர் மீதே, கொலைக்குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அந்த சந்தேகநபருக்கு, மனநலக் குறைபாடு உள்ளதன் காரணமாக குற்றப் பொறுப்பில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு, சந்தேகநபர் கொலையினைப் புரியும் போது ஸ்கிசோஃப்ரினியா (Schizophrenia) என்ற நோயால்
பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவரது மன நோய் காரணமாக தமது செயல்கள் தவறு என்று அறியும் திறன் அஹமத் இஸ்மாயிலுக்கு இல்லை என்றும் நீதிபதி கூறினார்.
இஸ்மாயில் குற்றப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற இந்தத் தீர்ப்பை, முதலில் இஸ்மாயிலின் சட்டத்தரணி கோரியிருந்த நிலையில், பின்னர் அரசு தரப்பு வழக்கறிஞரும் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
