நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இலங்கை விமானப்படையினர் தொடர்ந்தும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, இன்று கொத்மலைப் பகுதியில் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்குண்டு இடம்பெயர்ந்த சுமார் 30 பேரை விமானப்படைப் படையினர் வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.
இலக்கம் 06 படைப்பிரிவுக்குச் சொந்தமான MI-17 ரக உலங்கு வானூர்தி மூலம் மீட்கப்பட்ட இந்தக் குழுவினர், இரத்மலானை விமானப்படைத் தளத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இவர்களில் மேலதிக சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட நோயாளிகளும் உள்ளடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் விமானப்படை தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.