இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன், பங்களாதேஷில் இருந்து முதன்முறையாக மனிதாபிமான உதவிகளை ஏற்றிய விமானம் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
பங்களாதேஷ் விமானப்படைக்குச் சொந்தமான C-130 சரக்கு விமானம் டாக்காவிலிருந்து இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்த விமானத்தில் மொத்தம் 9,227 கிலோ எடை கொண்ட அத்தியாவசியப் பொருட்களான மருந்துகள், உலர் உணவுகள், நுளம்பு வலைகள் மற்றும் மீட்புக் கருவிகள் உள்ளடங்கிய நிவாரணப் பொருட்கள் கொண்டுவரப்பட்டன.
இந்த நிவாரணப் பொருட்களைக் கையளிக்கும் நிகழ்வின்போது, இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்தலீப் எலியாஸ், தூதரக அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் குழுவொன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
