Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இடையூறு விளைவித்த இராணுவத்தினர்

அக்டோபர் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் 2025 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்காக இன்று சிரமதான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு சிரமதான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதை தொடர்ந்து மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பகுதிக்கான வேலி அமைக்கும் பணிகள் ஆரம்பித்து இடம்பெற்று வருகின்றன.

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல வளாகம் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்புக்குள் காணப்படுகின்ற நிலைமையில் துயிலும் இல்லத்தில் ஒரு சிறிய பகுதியிலேயே குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் வருடம் தோறும் முன்னெடுக்கப்பட்ட வருகின்றன.

அந்த வகையிலே குறித்த வளாகத்தின் முன் பகுதிக்கான வேலி அமைக்கும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்ட வேளையில் குறித்த இடத்தில் இராணுவத்தினர் வருகை தந்து தமது முகாமுக்கு அருகில் உள்ள பகுதியில் வேலி கம்பங்களை அமைக்க வேண்டாம் என இடையூறு வழங்கியுள்ளனர்.

இருப்பினும் குறித்த பகுதிக்கான வேலி அமைப்பு பணிகள் நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன இதே வேளையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிர்வாகத்தினர் 2025 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெறுவதற்கான சிரமதான பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய ஏற்பாடுகளும் இடம்பெற உள்ளதாகவும் மாவீரர்களின் பெற்றோர் உறவுகள் வருகை தந்து தொடர்ந்து இடம்பெறும் பணிகளில் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரியுள்ளனர்.

இதே வேளை எதிர்வரும் முதலாம் திகதி முதல் தமது நிர்வாகத்தினர் நிதி சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதோடு அவர்களை உரியவகையில் அடையாளப்படுத்தி மக்கள் நிதி அன்பளிப்புகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் துயிலும் இல்லத்தில் மிக நெருக்கடிக்குள்ளேயே மாவீரர் நாளை அனுஸ்டித்து வருவதாகவும் இந்த அரசாங்கமாவது இந்த மாவீரர் துயிலும் இல்ல காணியை முழுமையாக விடுவித்து தர வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.

முந்தைய செய்தி மட்டக்களப்பில் மீட்கப்பட்ட கைக்குண்டு
அடுத்த செய்தி வெலிகம லசந்த கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில்.13 வயதான மகளை அடித்து துன்புறுத்திய குற்றத்தில் தாய் கைது.

பிப்ரவரி 13, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

மருத்துவ குணங்கள் நிரம்பிய மக்காச்சோளம் !

மார்ச் 25, 2025
அண்மைய செய்திகள்கனடா

சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்படுவார்களா?(Video இணைப்பு )

ஜூலை 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக உயர்வு!

டிசம்பர் 1, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?