வங்கிக் கணக்கிலிருந்து ரூ.569,610.00 மோசடி செய்த வழக்கில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் துறையின் வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு 29.05.2024 அன்று கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மோசடி, நிதி துஷ்பிரயோகம் மற்றும் நம்பிக்கை மீறல் ஆகிய குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய ஒரு சந்தேக நபரும், அதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த மூன்று சந்தேக நபர்களும் ஆவர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 மற்றும் 38 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் தெஹிதெனிய, முருத்தலாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
