ஸ்கார்பரோவில் முதியவரின் ரோலக்ஸ் (Rolex) கடிகாரத்தை திருடிய வழக்கில், சந்தேகநபர்கள் மீதான விசாரணைகள் தொடர்கின்றன.
ஸ்கார்பரோவில் உள்ள ஒரு வர்த்தக வளாகத்தின் (shopping plaza) வெளியே, கவனத்தைத் திசைதிருப்பி முதியவர் ஒருவரின் கையில் இருந்த ரோலக்ஸ் (Rolex) கடிகாரத்தை பலவந்தமாகப் பறித்துச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை டொராண்டோ பொலிஸார் கைது செய்தனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் அந்த முதியவர் காயமடைந்தார்.
இந்த சந்தேகநபர்கள் இருவர் மூலமாக மேலும் பலர் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
தற்போது சந்தேகநபர்கள் மீது குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
