கியூபெக் நகரப் பகுதியில் நிலத்தை பலவந்தமாக ஆக்கிரமிக்க சதி செய்ததாகக் கூறப்படும் ஒரு அரசாங்க எதிர்ப்புத் திட்டத்துடன் தொடர்புடைய மூன்று ஆண்களுக்கான பிணை விசாரணை இன்று தொடங்கியது.
இவர்கள் பயங்கரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.
இந்நிலையில் சைமன் ஆங்கர்ஸ்-ஆடெட் (Simon Angers-Audet), ரஃபேல் லகாஸ் (Raphaël Lagacé) மற்றும் மார்க்-ஆரேல் சாபோட் (Marc-Aurèle Chabot ) ஆகிய மூவருக்கும் பிணை வழங்குவதற்கு கனேடிய அரசுத் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த மூவரும் பயங்கரவாத நடவடிக்கைக்கு வசதி செய்தல், சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருத்தல், வெடிபொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட சாதனங்களை வைத்திருந்தல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதால், பொது பாதுகாப்பை கருத்தில் கொண்டு இவர்களுக்கு பிணை வழங்கக் கூடாது என்று, அரசுத் தரப்பு வழக்கறிஞர் கேப்ரியல் லாபியர் (Gabriel Lapierre) தமது வாதத்தை முன்வைத்தார்.
பயங்கரவாத நடவடிக்கைக்கு வசதி செய்தல் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை இம்மூவருக்கும் விதிக்கப்படலாம் எனத் தெரியவருகின்றது
