சர்வதேச சைபர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சீனப் பிரஜை ஒருவரை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள எல்லை கண்காணிப்புப் பிரிவினர் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
சந்தேக நபர் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து இலங்கை எயார்லைன்ஸ் விமானத்தல் இலங்கை வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குறித்த நபர் அதிக அளவிலான கணினி உபகரணங்களை தன்வசம் வைத்திருந்ததைக் கண்டு அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.
அதன்படி, சந்தேகநபரை விசாரணை செய்த போது, இலங்கை பங்குச் சந்தையுடன் தொடர்புடைய ஒரு முக்கிய தொழிலதிபரை சந்திக்க இலங்கை வந்ததாக தெரிய வந்துள்ளது.
மேலும் விசாரணையில், சர்வதேச இணைய நிதி மோசடி வலையமைப்புடன் தொடர்புகள் இருப்பது தெரியவந்தது.
அதன்படி, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, பின்னர் நாடு கடத்துவதற்காக இலங்கை எயார்லைன்ஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
