வியா ரெயில் (Via Rail) நிறுவனம், நாட்டின் இரண்டு பெரிய நகரங்களான மொன்ட்ரியல் மற்றும் ரொரன்டோவுக்கு இடையே இயக்கப்படவிருந்த நேரடி ரயில் சேவைக்கான முன்னோடிச்சோதனைத் திட்டத்தை (pilot project) ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
கிழக்கு ஒன்ராறியோவில் உள்ள பல ரயில் நிலையங்களைத் தவிர்க்கும் நோக்குடன் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இதன் மூலம், பயணிகளுக்கு ஒரு நகர மையத்திலிருந்து அடுத்த நகர மையம் வரையிலான இடைநிறுத்தமற்ற பயணத்தை வழங்குவதுடன், பயண நேரத்தை 30 முதல் 40 நிமிடங்கள் வரை குறைக்க முடியும் என்றும் வியா ரெயில் நிறுவனம் எதிர்பார்த்தது.
இந்த முன்னோடிச்சோதனைத் திட்டம் தற்போது ஒத்திவைக்கப்பட்டமைக்கு பிரதான காரணமாக, தங்கள் ரயில்வே பங்காளரான ‘சி.என்.’ (CN) நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள ‘செயல்பாட்டுத் தடையை’ (operational constraints) வியா ரெயில் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நேரடி ரயில் சேவை செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி அன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
