மாவனெல்லையில் மண் மேடு சரிந்து விழுந்ததில் புதைந்திருந்த மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மாவனெல்ல, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் இன்று காலை சுவர் கட்டும் தொழிலாளர்கள் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்
மேலும் , மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது மூவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார்மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்
