குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயர் அஸாருதீன் மொயினுதீன், இலஞ்ச ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர் 30 இலட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் பேருந்து நிலைய பராமரிப்பு மற்றும் பொது மலசலகூடங்களை துப்பரவு செய்வதட்கான ஒப்பந்தத்தை பெற்றுக் கொடுப்பதட்காகவே குருநாகல் மாநகர சபை பிரதி மேயரான அஸாருதீன் மொயினுதீன் இலஞ்சம் பெற்றுள்ளார்.


