மஹாராஷ்டிராவில் தொடர்ந்து இரு நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மஹாராஷ்டிர மாநிலம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதோடு மழையால் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து 11,800க்கு மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து மும்பை, தானே, நாசிக் உள்ளிட்ட இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக மீட்பு பணி மேற்கொள்ள வேண்டும் என மஹாராஷ்டிர முதலமைச்சர் பட்னவிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
