பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு நவம்பர் 13 ஆம் திகதி அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு அளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவாமி லீக் ஆட்சி காலத்தில் ஏராளமானோர் காணாமல் போன வழக்கை, நீதிபதி கோலாம் மோர்டுசா மொஜூம்தர் தலைமையிலான 3 உறுப்பினர்கள் கொண்ட சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் விசாரித்தது.
இது தொடர்பான வழக்கில் ஷேக் ஹசீனா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.தற்போது, அவர் பங்களாதேஷில் இல்லாத நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, புலனாய்வு பணிப்பாளர் அதிகாரிகள் உட்பட 29 பேருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்தது.
இதன்போது , ”மனித குலத்திறகு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தப்பி ஓடவில்லை. அவர் நாட்டை விட்டு கட்டாயமாக வெளியேறும் சூழல் ஏற்பட்டது” என ஷேக் ஹசீனாவின் சட்டத்தரணி முகமது அமீர் விளக்கம் அளித்துள்ளார்


