கரூரில் த.வெ.க தலைவர் விஜய்யின் பிரசாரத்தில் கலந்துகொண்ட மக்களில் 40 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.
பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக கரூரில் விஜய் பிரசாரம் செய்த வேலுச்சாமிபுரத்தில் கரூர் மாவட்ட தடயவியல் குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்த அனைத்தையும் காணொளியாகவும்,புகைப்படங்களாகவும் பதிவு செய்து கொண்டதோடு, பிரசாரத்தில் கலந்துகொண்ட மக்கள் தவறவிட்ட பொருட்கள் மற்றும் சந்தேகத்துக்கிடமான பொருட்களையும் தடயவியல் குழுவினர் சேகரித்து எடுத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
