நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று சந்தேகநபர்கள் பம்பலப்பிட்டிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் கனடாவில் தொழில் பெற்றுத் தரவதாகக் கூறி, நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
பொரளையைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும், கோனகங்கார மற்றும் பொரளைப் பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 68 வயதுடைய இரண்டு பெண்களுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேகநபர்களில் பெண் ஒருவர், கனடாவுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி, பொதுமகன் ஒருவரிமிருந்து 38 இலட்சம் ரூபாயையும் மற்றுமொருவரிடமிருந்து 34 இலட்சத்து ரூபாயையும் மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், சந்தேகநபர்களிமிருந்து, போலி விசா ஸ்டிக்கர்களும் மீட்கப்பட்டுள்ளன.
