Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் சுகாதார விதிமுறைகளை மீறிய உணவகம் மீது சட்ட நடவடிக்கை

ஜூலை 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னார் நகர பகுதியில் இயங்கி வரும் பிரபல உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுகாதாரப் பரிசோதனையின் போது, பாரிய சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து, அந்த உணவகத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபை மற்றும் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட சோதனையில், உணவகத்தின் சுகாதாரமற்ற நிலைமை கண்டறியப்பட்டது.

குறிப்பாக சுகாதாரமற்ற ஈக்கள் மொய்க்கும் சூழலில் உணவு தயாரித்தல் மற்றும் மிகவும் அசுத்தமான சூழலில் உணவு சமைத்தல். பழுதான காய்கறிகள் உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்துதல் மற்றும் கோழி கழிவுகளால் அசுத்தமடைந்த முட்டைகளை உணவில் சேர்ப்பது, சமைத்த மற்றும் சமைக்காத உணவுகள் பிரித்தறியாது, அசுத்தமான குளிர்சாதனப் பெட்டியில் (Fridge) ஒன்றாக சேமித்து வைத்தல்.

சூடான உணவுகளை தயாரிப்பதற்கும் பரிமாறுவதற்கும் அபாயகரமான பிளாஸ்டிக் உபகரணங்களை பயன்படுத்துதல்,உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் உரிய மருத்துவ சான்றிதழ்கள் இன்றி உணவுத் தயாரிப்பில் ஈடு பட்டுள்ளமை,குப்பைத் தொட்டிகளை மூடி யின்றி அசுத்தமாக வைத்திருத்தல் போன்ற குறைபாடுகள் அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது.

உணவுப் பொருட்கள் அழிப்பு மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கண்டவாறு சுகாதார விதிகளுக்கு முரணாக செயற்பட்டமை உறுதிப் படுத்தப்பட்டதையடுத்து, உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த சுகாதாரமற்ற உணவு பொருட்களை பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் உடனடி தடை விதித்தனர்.

அத்துடன், குறித்த உணவகத்துக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

முந்தைய செய்தி `ஒன்ராறியோவில் அதிகரித்துள்ள ஓபியாய்டு பயன்பாட்டு அவசர அழைப்புகள்
அடுத்த செய்தி யாழில் வாள் வெட்டு – மூவர் வைத்தியசாலையில்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ரோகிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம்-சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு!

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செங்கலடியில் உணவக உரிமையாளருக்கு 70 ஆயிரம் அபராதம்

மார்ச் 8, 2026
இலங்கை

மட்டு மாநகரசபை அமர்வில் நன்றி தெரிவித்த அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி

ஜனவரி 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் முந்தல் அந்தோனியார் சிற்றாலயத்திற்கு அரச அதிபர் தலைமையிலான குழுவினர் விஜயம்

மே 23, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?