அடுத்தாண்டு கொழும்பு தாமரை கோபுரத்தில் பங்கி ஜம்பிங் என்ற (கயிற்றின்மூலம் குதிக்கும் விளையாட்டு) ஒரு சாகச விளையாட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
உலகின் மிக உயரமான பங்கி ஜம் என்ற ரீதியில் இலங்கையின் தாமரை கோபுரமனது தெற்காசியாவின் முதல் பங்கி ஜம்ப் ஈர்ப்பை வழங்க எதிர்பார்த்துள்ளது.
இந்த ஒரு செயற்திட்டமானது கட்டமைப்பு பொறியியலாளர்களுக்கும் கோபுரத்தின் தொழில்நுட்பக் குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் நிறுவப்படவுள்ளது.
சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தவும், கலாச்சாரம், தொழில்நுட்பம், சாகசம் மற்றும் பொழுதுபோக்குக்கான இடத்திட்க்கு முதன்மையான இடமாக தாமரை கோபுரத்தை விளங்க வேண்டும் என்ற நோக்கோடு இது ஆரம்பிக்கப்படவுள்ளதாக தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் ஷிரந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், இந்த திட்டம் விளையாட்டு அமைச்சின் கீழ் அல்ல, வணிக ரீதியானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப்படவுள்ளதுடன் இலங்கையின் சாகச சுற்றுலாத் துறையை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
