மாரவில, முதுகடுவ கடற்கரையில் தலை மற்றும் கைகால்கள் இல்லாத ஒரு உடலம் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மாரவில காவல்துறையினர் உடலத்தைக் கண்டெடுத்துள்ளனர்.
உடலம் ஹலவத்தை மருத்திவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட உடலம் ஆணுடையது என்றும் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
