வவுனியா மாநகரசபையின் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் இடையேயான கருத்து முரண்பாடுகள், சமீபகால செயற்பாடுகள் மற்றும் வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபை தொடர்பாக ஆராய்வதற்காக இம்மாத இறுதிக்குள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உயமட்ட குழு கூட உள்ளதாக கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாநகர சபையில் ஆளும் தரப்பு உறுப்பினர்களுக்கிடையில் காணப்படுகின்ற முரண்பாடுகள், சமீபத்திய செயற்பாடுகள் தொடர்பாகவும், கூட்டணி கட்சிகளுக்கிடையிலான குழப்ப நிலைகள் தொடர்பாகவும், ஏனைய உள்ளூராட்சி சபைகள் அமைக்கும் போது கூட்டமைப்பின் முடிவுகளை மீறி செயற்பட்ட உறுப்பினர்கள் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
மேலும் உள்ளூராட்சி சபைகள் அமைக்கப்படும் போது கட்சியின் தீர்மானத்தை மீறி செயற்பட்டவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாகவும் ஆரயப்படவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.


