இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கைக்கு இலங்கை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ பதில் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வெளிப்புற தலையீடுகள், தேசிய முயற்சிகளைத் தடுக்கவும் மக்களைத் துருவப்படுத்தவும் மட்டுமே உதவும் என இலங்கை தெரிவித்துள்ளது.
எனவே, சர்வதேச நடவடிக்கை தொடர்பான அறிக்கையில் கூறப்பட்ட தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளுடன் இலங்கை அரசாங்கம் உடன்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனம், மதம் மற்றும் சாதி அடிப்படையில் எந்தப் பிரிவினையோ அல்லது பாகுபாடோ இல்லாமல் அதன் மக்களின் பன்முகத்தன்மையை மதிக்கும் மற்றும் அனுபவிக்கும் ஒரு நாட்டை நோக்கிச் செயல்படுவதற்கே அரசாங்கத்திற்கு மக்களாணை இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதற்கமைய, அரசாங்கம் அதில் உறுதியாகவும் உண்மையாகவும் உறுதியாகவும் உள்ளது.
இலங்கையில் இனவாதம் அல்லது தீவிரவாதம் மீண்டும் தலைதூக்க அனுமதிக்கக் கூடாது என்பதே தற்போதைய அரசாங்கத்தின் முழுமையான உறுப்பாடு என்றும் அந்தப் பதிலறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இலங்கை ஒரு உள்நாட்டுச் செயல்முறை மூலம் முன்னேறும்போது, சர்வதேச சமூகத்தின் புரிதல் மற்றும் ஆதரவை இலங்கை வரவேற்பதாகவும் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை அரசாங்கத்தின் பதிலறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை ஆரம்பமாகவுள்ள 60 ஆவது அமர்வில் பங்கேற்கும் அமைச்சர் விஜித ஹேரத், நாளை இலங்கை நேரப்படி பிற்பகல் 3.45 மணிக்கு இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
