Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வருமான வரி பரிசோதகர் என யாழில் பணம் பறிப்பு – இராணுவ புலனாய்வாளர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது.

ஜனவரி 19, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் வருமான வரி பரிசோதகர்கள் என கூறி நகைக்கடையொன்றின் உரிமையாளரிடம் பணம் பறித்து சென்ற சம்பவம் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவினரை சேர்ந்த இருவர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 16ஆம் திகதி யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள நகை கடை ஒன்றினுள் சென்று தம்மை வருமான வரி பரிசோதகர்கள் என அடையாளப்படுத்திய கும்பல் ஒன்று கடை உரிமையாளரிடம் இருந்து 30 இலட்ச ரூபாய் பணத்தினை பறித்துக்கொண்டு தப்பி சென்றது.

சம்பவம் தொடர்பில் நகைக்கடை உரிமையாளர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எனும் குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.

குறித்த சந்தேகநபரே, நகைக்கடையில் அமைவிடம், கடை உரிமையாளரின் விபரங்கள் என்பவற்றை ஏனைய சந்தேக நபர்களுக்கு கூறி திட்டத்தை வகுத்து கொடுத்துள்ளார் என விசாரணைகளில் தெரிய வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கண்டியில் இருந்தே வாகனத்தில் ஏனையவர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்ததாக கூறப்பட்டதை அடுத்து, கண்டிக்கு விரைந்த பொலிஸ் குழு கண்டியில் வைத்து வாகன சாரதி உள்ளிட்ட மூவரை கைது செய்தனர்.

அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் கொழும்பில் தலைமறைவாக உள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கொழும்புக்கு சென்ற பொலிஸ் குழு கொழும்பில் வைத்து இருவரையும் கைது செய்தனர்.

கண்டி மற்றும் கொழும்பில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் யாழ்ப்பாணம் கொண்டு வந்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஐந்து சந்தேக நபர்களில் கிளிநொச்சியில் உள்ள இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்த இராணுவ சிப்பாய் உள்ளிட்ட இரு இராணுவ புலனாய்வாளர்களும், தெற்கில் உள்ள அரசியல் கட்சி ஒன்றின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, நகைக்கடை உரிமையாளரிடம் பறித்த 30 இலட்ச ரூபாய் பணத்தினையும் 06 நபர்களும் தலா 05 இலட்ச ரூபாய் வீதமாக சமமாக பங்கிட்டு கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடம் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

முந்தைய செய்தி குழந்தை ம. சண்முகலிங்கத்தின் இறுதி கிரியைகள் நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.
அடுத்த செய்தி குருநகரில் மினி சூறாவளி.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

25 வருட போராட்டத்தின் பின்னர் காணி உரிமத்திற்கான பெயர் விவரம் வெளியீடு.

பிப்ரவரி 24, 2025
இலங்கை

சாவகச்சேரி வைத்தியசாலையின் வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை – ஆ.கேதீஸ்வரன்

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினரை விசாரணைக்கு அழைத்த சிஜடியினர்

அக்டோபர் 9, 2025
இலங்கை

யாழில் வயோதிபப் பெண் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்!

செப்டம்பர் 13, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?