கனடாவின் பொது சுகாதார நிறுவனம் (PHAC) தனது ஊழியர்களில் சுமார் 10% பேரை, அதாவது கிட்டத்தட்ட 320 பேரை, பணிநீக்கம் செய்யவுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிந்தைய மறுசீரமைப்பு மற்றும் புதிய நிதியைப் பயன்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிநீக்கங்கள், அரசாங்கத்தின் பொதுத்துறை செலவினங்களைக் குறைக்கும் பரந்த திட்டத்துடன் தொடர்பில்லாதவை என பொது சுகாதார நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அடுத்த வாரத்தில் பணிநீக்க கடிதங்கள் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெருந்தொற்று காலத்தில், பொது சுகாதார நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.
2020-க்கு முன் சுமார் 2,300 பணியாளர்கள் இருந்த நிலையில், 2022-ல் இந்த எண்ணிக்கை 4,200-க்கும் அதிகமாக உயர்ந்தது.
இப்போது, பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் செயற்பாடானது, அரசின் சில திட்டங்களை மறுசீரமைத்தல் மற்றும் நிறுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
