ஒட்டாவாவில் Stittsville Muslim Association (SMA) கட்டிடத்தின் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, முஸ்லிம் சமூகத்திற்கு பிற சமூகங்களிடமிருந்து ஆதரவு பெருகி வருகிறது.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.
கடந்த மாத இறுதியில் Stittsville Muslim Association-ன் தலைமையகத்திற்குப் பின்னால் உள்ள ஒரு கொட்டகை போன்ற கட்டிடத்தின் மீது, இனவெறி வார்த்தையொன்று, ஸ்ப்ரே பெயிண்டால் எழுதப்பட்டது.
இந்த இடம் குழந்தைகள் தங்கள் சைக்கிள்களை நிறுத்தி, கூடைப்பந்து விளையாடும் இடத்திற்கு அருகில் உள்ளது.
இந்தச் சம்பவம் இஸ்லாமோஃபோபியா தாக்குதல்களின் தொடர்ச்சியாக இருப்பதாக, Stittsville Muslim Association அமைப்பின் தலைவர் அமீர் சித்திக்கி தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கவுன்சிலர் கிளென் கௌவர், சமூகத்தில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில், ஆதரவும் அக்கறையும் பெருமளவில் வெளிப்பட்டுள்ளதாக, குறிப்பிட்டுள்ளார்.
