நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களின் பின்னணியில் செயற்பட்டதாக கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்களின் உறுப்பினர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பொலிஸ் மா அதிபர்,
கைது செய்யப்பட்ட குழுவில் கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த, பாணந்துரை நிலங்க, பாக்கோ சமன் மற்றும் தம்பரி லஹிரு என்ற புனைப்பெயர்களால் அழைக்கப்படும் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக தெரிவித்தார்.
கூடுதலாக, பாக்கோ சமனின் மனைவி மற்றும் மூன்று வயது குழந்தையும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர் எனவும் சுட்டிக்கட்டினார்.
குற்றப் புலனாய்வுத் பிரிவின் சிறப்புக் குழு மற்றும் பொலிஸாரின் கூட்டு நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
தொடர்ந்து சந்தேகநபர்களை வெகுவிரைவில் நாட்டுக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
