கிழக்கு டான்பாஸ் பிராந்தியம் அனைத்தையும் யுக்ரைன் கைவிட வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேட்டோவில் சேரும் இலட்சியங்களைக் கைவிட வேண்டும் எனவும் நடுநிலையாக இருக்க வேண்டும் எனவும் புடின் குறிப்பிட்டுள்ளதாக ‘உயர்மட்ட கிரெம்ளின் சிந்தனையை நன்கு அறிந்த ஆதாரங்களை’ மேற்கோள்காட்டி ரொய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை மேற்கத்தேய நாடுகளின் துருப்புகளை நாட்டிற்கு வெளியே வைத்திருக்க வேண்டும் எனவும் யுக்ரைனுக்கு அவர் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
