பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சந்தித்த தோல்விகளை முன்னிட்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையான தீர்மானமொன்றை எடுத்துள்ளது.
2025 – 2026 ஆம் ஆண்டில் எந்தவொரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரையும் A பிரிவில் இணைக்காமல் இருப்பதே அத் தீர்மானம்.
கடந்த வருடம் பாபர் அசாம் மற்றுமு் முகமது ரிஸ்வான் இருவரும் A பிரிவில் இணைக்கப்பட்டிருந்தனர். ஆனால், இந்த வருடம் இருவரும் B பிரிவுக்கு தரமிறக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் B பிரிவில் இருந்த பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் தலைவர் ஷான் மசூத் D பிரிவுக்கு தரமிறக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் சட்ட ரீதியான பிரச்சினை காரணமாக சுமார் 8 வருடங்களாக தனது மத்திய ஒப்பந்தத்தை இழந்த ஃபகார் ஜமான் இந்த வருடம் B பிரிவில் இணைக்கப்பட்டுள்ளார்.
