இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வீடற்றவர்களுக்கான அவசரகால புகலிடமாக பயன்படுத்தப்பட்ட ஒட்டாவாவில் உள்ள ஹெரான் சாலை சமூக மையம் (Heron Road Community Centre) மீண்டும் திறக்கப்படவுள்ளது.
உள்ளூர் கவுன்சிலர் மார்ட்டி கார் (Marty Carr) இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
சமூக மையத்தில் தங்கியிருந்த கடைசி நபர்கள் வேறு பொருத்தமான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மார்ட்டி கார் தெரிவித்தார்.
சுமார் இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த இந்த சமூக மையம், மீண்டும் திறக்கப்படுவது குறித்து உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஆல்டா விஸ்டா சமூக சங்கத்தின் (Alta Vista Community Association) உறுப்பினர் ஜான் ரெடின்ஸ், மையத்தின் இருப்பு சமூகத்திற்கு மிகவும் அவசியமானது என்று கூறினார்.
புதிய வீடுகள் கட்டப்பட்டு வரும் நிலையில், எதிர்காலத்தில் மையத்திற்கான தேவை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
