தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்மசிறி பண்டார, இலங்கை ஏற்றுமதிகள் மீது விதிக்கப்படும் பரஸ்பர வரி விகிதங்களை மேலும் குறைக்க அமெரிக்காவுடன் இலங்கை தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிதுள்ளார்.
குறிப்பாக எதிர்க்கட்சியின் கடந்த கால விமர்சனங்களை கருத்திற் கொண்டு, இலங்கை உற்பத்தியாளர்களுக்கு மிகவும் சாதகமான வர்த்தக விதிமுறைகளைப் பெற அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருவதாக அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் பண்டார கூறுகையில் ,“அமெரிக்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவும் அதன் கொள்கை திசையை கட்டுப்படுத்தவும் வரிகளைப் பயன்படுத்துகிறது என்று எதிர்க்கட்சி பலமுறை கூறி வருகிறது.
ஆனால் நாங்கள் வேறுவிதமாக நிரூபித்துள்ளோம். நாங்கள் ஏற்கனவே கட்டண விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகவும், பின்னர் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 20% ஆகவும் குறைத்துள்ளோம். அதை இன்னும் குறைக்க பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.” என்று கூறினார்.
