கொழும்பில் வசிக்கும் இளம் பெண் ஒருவரின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் இருந்து எடுத்து , அவற்றை டிஜிட்டல் முறையில் ஆபாசமாக மாற்றி இணையத்தில் பரப்பிய குற்றச்சாட்டில் கைதான இளம் பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகநபர் கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையின் முன்னாள் மாணவி என்றும், தற்போது தனியார் விண்ணப்பதாரராக பொதுத் தர உயர்தர (GCE Advanced Level) பரீட்சைக்கு தோற்றவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
சந்தேக நபரான பெண் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதமும் இழப்பீடும் வழங்க இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது’
இரண்டு தனித்தனி குற்றச்சாட்டுகளின் கீழ், சந்தேகநபருக்கு தலா ரூ.2,500 அபராதமும், ரூ.25,000 இழப்பீடும் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மொத்தமாக ரூ.50,000 இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என நீதவான் உத்தரவிட்டார்.

