பிரபல பல்பொருள் அங்காடியின் கிளைகளுக்கு அபராதம் விதிப்பு!
காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள் அங்காடியின் மூன்று கிளைகளுக்கு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் ரூ. 600,000 அபராதம் விதித்துள்ளது.
காலாவதியான ஜெலி, மெந்தோல் மற்றும் பிஸ்கட்களை விற்பனைக்கு வழங்கியதற்காக நுகர்வோர் விவகார அதிகாரசபை தாக்கல் செய்த மூன்று தனித்தனி வழக்குகளில் ஒவ்வொரு கிளைக்கும் ரூ. 200,000 அபராதம் விதிக்கப்பட்டது.
நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதையும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட வழக்கமான ஆய்வுகளைத் தொடர்ந்து இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் எந்தவொரு சில்லறை விற்பனையாளருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை தொடரும் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் எச்சரித்தனர்.
