கல்வி சீர்திருத்தம் என்பது வெறும் பாடத்திட்ட மாற்றம் மட்டும் அல்ல, கல்வி முறையே மாற்றப்பட வேண்டும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இன்றுபாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஒரு வகுப்பில் ஒரு மாணவன் கற்றுக்கொள்ளும் பாடங்களைத் தாண்டி, உலகளாவிய குடிமகனாக வளர ஒரு அடிப்படை மாற்றத்தைத் திட்டமிடுகிறோம். 2035ஆம் ஆண்டுக்கான வேலை வாய்ப்பு உலகிற்கு ஏற்ற கல்வியை வழங்க வேண்டும். வெறும் தேர்வுகளிலும் மதிப்பெண்களிலும் கட்டுப்பட்ட கல்வியைக் கடந்து, மகிழ்ச்சியுடன் கற்றுக்கொள்வதற்கான சூழல், விளையாட்டும், திறனும் இடம்பெறும் அமைப்பை உருவாக்குவதே எங்களின் நோக்கம்.
தொழிற்கல்வி, மனிதநேயப் பாடங்கள், பெற்றோர் சுமையை குறைக்கும் முயற்சிகள், மற்றும் அனைவருக்கும் நியாயமான கல்வி வாய்ப்பு வழங்கவேண்டும்.
இது இறுதி கல்வி முறை என எங்களால் இன்னும் உறுதியாக கூற முடியவில்லை. எனவே, உங்கள் பரிந்துரைகளையும் கருத்துகளையும் எங்களுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


