கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன் 102வது வயதில் காலமானார்.
1923 அக்டோபர் மாதம் 20ம் திகதி ஆழப்புலாவில் பிறந்த அச்சுதானந்தன் 1938ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.கட்சி மீதான தடையால் 6வருடங்கள் தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்த வி.எஸ். அச்சுதானந்தன், பின்னர் தொழிலாளர்களுக்காக பல போராட்டங்களையும் முன்னெடுத்தார்.
1965 தொடங்கி 2016ம் ஆண்டுவரை 10முறை தேர்தலில் போட்டியிட்டு 7முறை சட்டசபைக்கு தெரிவானார்,2006 இருந்து 2011வரை கேரளாவின் முதலமைச்சராகவும் பதவி வகித்தார்.
100வயதை கடந்த இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் எனும் பெருமையையும் வி.எஸ். அச்சுதானந்தன் கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.