ஈரானிலுள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஈரானிய பத்திரிகை செய்தி தளமொன்று செய்தியை வெளியிட்டுள்ளது.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இருந்து சுமார் 670 கிலோமீற்றர் தொலைவில் உள்ள அபாடன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அபாடன் சுத்திகரிப்பு நிலையத்தில் (19) கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன் குறித்த தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரத்தில் தீயை அணைத்தபோதிலும் தீயின் வேகம் கட்டுக்குள் வரவில்லை என கூறப்பட்டுள்ளது.
இந்த அபாடன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 1912 இல் தனது ஆரம்பித்தது. இது நாட்டின் எரிபொருளில் சுமார் 25 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது. இங்கு தினமும் 5,200,000 பீப்பாய்களுக்கு மேல் சுத்திகரிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
