லித்துவேனியாவிற்குள் பெலாரஸிலிருந்து வரும் பலூன்கள் நுழைவதால் அந்நாட்டில் உள்ள வில்னியஸ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள் காரணாமாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுகின்றமையால் லித்துவேனியாவில் அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக லித்துவேனியா உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் எல்லைப் பகுதிகளில் பொலிஸார் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையுடன் இணைந்து இராணுவத்தினரும் இணைந்து பணியாற்றுகின்றனர்.
இதன்போது இராணுவத்தினருக்கு தேடுதல், கைது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெலாரஸிலிருந்து இதுவரைக்கும் சுமாா் 600 பலூன்களும், 200 ட்ரோன்களும் ஊடுருவியுள்ளதோடு, 350 விமானங்கள் தாமதமாகியுள்ளதோடு 51,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் வில்னியஸ் விமான நிலையம் 60 மணி நேரமாக மூடப்பட்டுள்ளதால் 7.5 இலட்சம் யூரோ இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
