இஸ்ரேல் மீதான ஈரானின் ட்ரோன் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையர்களுக்கோ அல்லது பிறருக்கோ கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரான்-இஸ்ரேல் மோதலின் பத்தாவது நாளைக் குறிக்கும் வகையில், இன்று ட்ரோன் தாக்குதல்கள் பதிவாகியிருந்தாலும், பெரிய தாக்குதல்கள் எதுவும் பதிவாகவில்லை என்று தூதுவர் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் அன்றாட வாழ்க்கை வழக்கம் போல் தொடர்வதோடு , அத்தியாவசிய அரச சேவைகள் முறையாக இயங்குகின்றன என்றும் தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
