சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிந்தபுர பகுதியில் இன்றைய தினம் காலை வேளையில் காட்டுயானை ஒன்று தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேய்ச்சல் நடவடிக்கைகளுக்காக தனது மாட்டினை அழைத்து செல்வதற்காக தனது மாட்டினை தேடிச் சென்றபோது குறித்த நபரை காட்டு யானை தாக்கியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவத்தில் ஈச்சிலம்பற்று – பூநகர் பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான 57 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச் சடலம் மீதான திடீர் மரண விசாரணை அதிகாரி நடத்திய விசாரணை மற்றும் பொலிஸார் நடத்திய விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
