கனடாவிலும் உலகெங்கிலும் வசிக்கும் தனது விமர்சகர்கள் மீதான சீன அரசாங்கத்தின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையவழிக் கொடுமைகள், அச்சுறுத்தல்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை இலக்கு வைப்பது போன்ற வகைகளில் இத்தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
“நாடுகடந்த ஒடுக்குமுறை” என்று அழைக்கப்படும் இந்த போக்கு, கனடாவின் ஜனநாயகம் மற்றும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மக்கள் சீனக் குடியரசை எதிர்த்து கருத்து வெளியிட்ட கனேடிய சீனர்கள் தாம் பின்தொடரப்பட்டு கண்காணிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், சீனாவில் வசிக்கும் தமது குடும்ப உறுப்பினர்களிடம் அந்த நாட்டின் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இவை மட்டுமன்றி அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகளையும் இணையவழித் தாக்குதல்களையும் தாங்கள் எதிர்கொண்டு வருவதாகவும் கூறிய அவர்கள், இவற்றின் பின்னணியில் சீன அரசே உள்ளது என குற்றம் சுமத்துகின்றனர்.
